
யுவராஜ் கேப்டன்
இது குறித்து பேட்டி ஒன்றில் யுவராஜ் கேப்டனாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கேள்வி எழுப்பபட்டது. அப்போது பேசிய ஹர்பஜன் சிங், யுவராஜ் கேப்டனாக இருந்தால், நாங்கள் இந்திய அணியில் இருக்கும் போது சீக்கிரம் தூங்கி இருப்போம். அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருந்திருப்போம்.யுவராஜ் ஒரு சிறந்த கேப்டனாக விளங்கி இருப்பார். அதற்கு அவர் நிகழ்த்திய சாதனைகளே சான்றாக இருந்திருக்கும்.

யார் காப்பாற்றப்பட்டு இருப்பார்?
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் சிங் தான் வென்றார். அது எங்களுக்கு கவுரமான தருணம் என்றார். அப்போது யுவராஜ் கேப்டனாக இருந்தால், எந்த வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை காப்பாற்றப்பட்டு இருக்கும் என்றும் அந்தப் பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.

நாடு தான் முக்கியம்
அதற்கு பதில் அளித்து பேசிய ஹர்பஜன் சிங், எனக்கு தெரிந்து யுவராஜ் கேப்டனாக இருந்திருந்தால் எந்த ஒரு வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையும் நீட்டிக்கப்பட்டு இருக்காது. எங்கள் திறமைக்கு ஏற்ப தான் அணியில் இடம்பெற்றிருந்தோம். இதனால் யுவராஜ் இல்லை வேறு எந்த கேப்டனாக இருந்தாலும் எந்த வீரரையும் காப்பாற்ற முடியாது.

மாற்றி பேசிய ஹர்பஜன்
நீங்கள் உங்கள் நாட்டு அணிக்கு கேப்டனாக இருக்கும் போது, உங்கள் நட்பை எல்லாம் ஓரங்கட்டிவிட வேண்டும். நட்பை விட நாடு தான் முக்கியம் என்றும் ஹர்பஜன் சிங் கூறி இருந்தார். ஹர்பஜன் சிங் அளித்த பதில் தோனியை வம்பிழுப்பது போல் இருந்ததாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் அணியில் தாம் இடம்பிடிப்பது குறித்து தோனியை விமர்சித்த ஹர்பஜன் இன்று கடமை, கட்டுப்பாடு என்று பேசி இருப்பதும் வேடிக்கையாக உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,


Click it and Unblock the Notifications











