
இந்திய அணி தோல்வி
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் இந்தியா லீக் சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து ராகுல் டிராவிட் புதிய பயிற்சியாளராக பதவியேற்றுக்கொண்டார். டிராவிட் - ரோகித் சர்மா ஜோடி இந்திய அணிக்காக பல்வேறு தொடர்களை வென்றுக்கொடுத்தனர். இந்த முறை உலக்கோப்பை கனவையும் நிஜமாக்குவார்கள் என நினைத்த போது தான் ஏமாற்றம் கிடைத்துள்ளது.

ஹர்பஜன் கருத்து
இந்நிலையில் பயிற்சியாளரை மாற்ற வேண்டும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியில் கேப்டன் மட்டுமின்றி பயிற்சியாளரையும் மாற்றியே தீர வேண்டும். டி20 கிரிக்கெட்டை நன்கு புரிந்துக்கொண்டு, சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒரு நபரை அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க வேண்டும். ஒருவேளை டிராவிட்டை நீக்க மனம் வரவில்லை என்றால் ஆலோசகராகவாவது நியமித்திட வேண்டும்.

புத்துணர்ச்சி தரும்
டிராவிட் மிகவும் திறமையானவர் தான். ஆனால் ஆஷிஸ் நெஹ்ரா போன்று சமீபத்தில் ஓய்வு பெற்ற நபர் டிராவிட்டிற்கு உதவியாக இருந்தால் சிறப்பாக இருக்கும். நெஹ்ரா மிகவும் திறமையானவர். தனது முதல் சீசனிலேயே குஜராத் அணியை கோப்பையை வெல்ல வைத்தார். அப்படிபட்டவரை மிஸ் செய்துவிடக்கூடாது.

புதிய கேப்டன்
இதே போல இந்திய அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா பதவியேற்க வேண்டும். பாண்ட்யா மற்றும் நெஹ்ராவை உள்ளே கொண்டு வந்தால் இளம் வீரர்களுக்கு ஒரு கூடுதல் புத்துணர்ச்சி கிடைக்கும். எனவே இதுகுறித்து பிசிசிஐ பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications











