
தோனி மீது புகார்
சமீபத்தில் தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்த ஹர்பஜன் சிங், தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது குறித்து அப்போதைய கேப்டன் தோனியிடம் பல முறை விளக்கம் கேட்டதாக கூறினார். ஆனால் அதற்கு தோனி எந்தவொரு பதிலும் கொடுக்கவில்லை, ஒருவிதத்தில் என் வாய்ப்புகள் பறிபோனதற்கு தோனியும் மறைமுகமான காரணமாக இருக்கலாம் என்பது போல சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார்.

முறைகேடு?
இந்நிலையில் மற்றொரு பூகம்பத்தை கிளப்பியுள்ளார். ஹர்பஜனிடம் கேப்டனாக நீங்கள் செயல்படவில்லை என்ற வருத்தம் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கேப்டனாக செயல்படுவதும் ஒரு சாதனை தான். ஆனால் நான் கேப்டனாக நியமிக்கப்பட, எனக்கு பிசிசிஐ-ல் யாரும் நெருங்கியவர்கள் இல்லையே?.. இந்திய அணி கேப்டனாக ஆக வேண்டும் என்றால் பிசிசிஐ-ல் பெரும் அதிகாரத்தில் இருக்கும் யாரையேனும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அந்த சிபாரிஸில் தான் ஆக முடியும்.

கேப்டன்களுக்கே அட்வைஸ்
நான் கேப்டன்சி செய்ய முழு தகுதியுடையவன். பல கேப்டன்களே எனது அறிவுரைகளை கேட்டு செயல்பட்டுள்ளனர். எனினும் கேப்டனாகவில்லை என்ற வருத்தம் எனக்கு இல்லை. என் தேசத்திற்காக நான் சிறப்பான சேவை செய்துள்ளேன் என்ற நிம்மதி எனக்கு உள்ளது என ஹர்பஜன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பிசிசிஐ நடவடிக்கை
முன்பு தோனியின் கேப்டன்சியை தாக்கிய ஹர்பஜன், தற்போது பிசிசிஐ-க்கு இழுவுப்படுத்துவது போன்ற வார்த்தைகளை உதிர்த்துள்ளார். இதனையடுத்து அவர் மீது பிசிசிஐ சார்பில் ஏதேனும் நடவடிக்கைகள், பதில்கள் பாயுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











