சென்னை:சிஎஸ்கே அணி வீரர் ஹர்பஜன் சிங், ஆசியாவின் தங்க மகள் கோமதி மாரி முத்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கத்தார் தலைநகர் தோஹாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவிற்காக ஓடிய தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்.
தமக்காக யாரும் உதவ வில்லை என்றும், தம்மை சென்னை விமான நிலையத்தில் அரசு தரப்பில் யாரும் வரவேற்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்தியாவுக்கு பெருமைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அவர்களை போல சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் தமது ட்விட்டர் பக்கத்தில் கோமதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் ஹர்பஜன் கூறி இருப்பதாவது:
பசித்த வயிறு.பணமில்லா வாழ்க்கை.உதவ ஒருவரும் இல்லை.ஆனால் இந்த பெண்ணின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம்.நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு #GomathiMarimuthu ஒரு சாட்சி..Hats-off #Gomathi you are such an Inspiration to the Nation pic.twitter.com/nKonTRZHm6
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 28, 2019
பசித்த வயிறு. பணமில்லா வாழ்க்கை. உதவ ஒருவரும் இல்லை. ஆனால் இந்தப் பெண்ணின் வெற்றி கதை நமக்கு ஒரு பாடம். நம்பிக்கை வெற்றியோடு வரும் ஆனால் வெற்றி நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும் என்பதற்கு #GomathiMarimuthu ஒரு சாட்சி. Hats-off #Gomathi you are such an Inspiration to the Nation' என்று பதிவிட்டுள்ளார்.