துபாய் : ஹர்திக் பண்டியா நேற்று நடந்த இந்தியா, பாகிஸ்தான் போட்டியின் போது காயமடைந்தார். இது போல இந்திய வீரர்கள் முக்கிய போட்டியின் நடுவே காயமடைவது அதிகரித்து வருகிறது.
நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாங்காங் போட்டியில் பண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட்டது.
நேற்றைய முக்கிய போட்டியில் ஆல் ரவுண்டர் பண்டியா சேர்க்கப்பட்டார். அவருக்கு காயம் ஏற்பட்டு மைதானத்தை விட்டு வெளியேறியவர் அதன் பின் திரும்பவில்லை. அவர் இந்த ஆசிய கோப்பை தொடரில் ஆடவில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக தீபக் சாஹர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
{photo-feature}