சர்ச்சை பேச்சு
ஹிந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல், தங்கள் பேச்சில் சில சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பேசினர். பண்டியா பெண்கள் குறித்து பேசிய விதம் எதிர்ப்புகளை கிளப்பியது.
இடைக் காலத் தடை
சமூக வலைதளத்தில் எழுந்த எதிர்ப்பை அடுத்து பிசிசிஐ அவர்களுக்கு இந்த விவகாரம் குறித்த விசாரணை முடியும் வரை இடைக் காலத் தடை விதித்தது. இதனால், இருவரும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்தனர்.
பிசிசிஐ விசாரணை
உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் பிசிசிஐ இருப்பதால், இந்த விவகாரத்தை விசாரிக்க ஒருவரை நியமிக்குமாறு பிசிசிஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது பிசிசிஐ. இதற்கிடையே, முன்னாள் வீரர்கள் பலர் இடைக் காலத் தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இடைக்கால தடை நீக்கம்
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் பிற விசாரணை நடைமுறைகள் முடிய நீண்ட காலம் ஆகும் என்பதால், இடை நீக்கத்தை ரத்து செய்தது பிசிசிஐ. இதனால், ஹர்திக் பண்டியா இந்திய அணியில் இணைந்தார். ராகுல் இந்தியா ஏ அணியில் சேர்ந்து ஆடி வருகிறார்.
புதிய வழக்கு
இருவரும் ஓரளவு சிக்கலில் இருந்து தப்பினார்கள் என எண்ணிய வேளையில், ஜோத்பூர் காவல்நிலையம் ஒன்றில் இவர்களின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
பாதிப்பு ஏற்படுமா?
இந்நிலையில், பிசிசிஐ விசாரணை, காவல்துறை வழக்கு என இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர் பண்டியா மற்றும் ராகுல். ஹர்திக் பண்டியா உலகக்கோப்பை அணியில் இடம் பெற அதிக வாய்ப்புண்டு என கூறி வரும் நிலையில், இந்த புதிய வழக்கால் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.