For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அவர வச்சு நிறைய ப்ளான் போட்டோம், ஆனா” பண்ட்-ன் இடத்தை நிரப்புவது யார்? ஹர்திக் வருத்தத்துடன் பதில்

மும்பை: இந்திய அணியில் ரிஷப் பண்ட்-ன் எதிர்காலம் குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசியுள்ளார். அவரின் இடத்தை யார் நிரப்பப்போகிறார் என்பது குறித்தும் உருக்கமாக பேசியிருக்கிறார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. இதன் முதல் டி20 போட்டி நாளை மாலை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா தான் வழிநடத்தவுள்ளார். இவரின் தலைமையில் வெற்றியுடன் ஆண்டை தொடங்க இந்திய வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ஹர்திக் பேச்சு

ஹர்திக் பேச்சு

இந்நிலையில் இப்போட்டிக்கான செய்தியாளர் சந்திப்பில் ரிஷப் பண்ட்-ன் உடல்நிலை குறித்து பேசியுள்ளார் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா. அதில், நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்-க்கு விபத்து ஏற்பட்டது துரதிஷ்டவசமான ஒன்று. அவர் அணியில் மிகவும் முக்கியமான வீரர், ஆனால் சூழல்நிலை என்னவென்பது பற்றி அனைவருக்குமே தெரியும். எங்களின் உலகக்கோப்பை திட்டத்தில் பண்ட் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் தற்போது அனைத்தும் சொதப்பியுள்ளது

பலருக்கு வாய்ப்பு

பலருக்கு வாய்ப்பு

ரிஷப் பண்ட் அணியில் இல்லாததால் பல்வேறு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பண்ட்-ஐ போன்ற வீரர் அணியில் இருந்தால், அங்கு நடக்கும் மேஜிக்கே வித்தியாசமாக இருக்கும். எனினும் அவருக்கு மாற்று வீரர் யார் என்பதை கண்டறிவோம்.

ஒரு அணியாக அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துகிறோம். எங்களின் அன்பும், பிரார்த்தனையும் வேகமாக குணமடைய உதவும்.

மருத்துவ ரிப்போர்ட்

மருத்துவ ரிப்போர்ட்

ரிஷப் பண்ட் தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் எந்தவித எலும்பு முறிவும் இல்லை, உடல் முழுவதும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் தான் உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே இன்னும் 2 - 3 நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் எனத்தெரிகிறது.

எப்போது குணமாவார்

எப்போது குணமாவார்

ரிஷப் பண்ட்-ன் காயங்கள் ஆபத்தானவை இல்லையென்றாலும் அவர் முன்பை போல முழு உடற்தகுதியை பெற குறைந்தது 5 - 6 மாதங்கள் வரை ஆகும் எனத்தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் யோ யோ டெஸ்ட் மற்றும் டெக்ஸா பரிசோதனைகளில் தேர்ச்சி பெற்ற பின்னரே மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Monday, January 2, 2023, 19:34 [IST]
Other articles published on Jan 2, 2023
English summary
Hardik pandya reveals the Rishabh pant's Replacement plan in Team India, ahead of srilanka series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+