
இறுதி சுற்று
இந்திய அணி என்னதான் ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்தியிருந்த போதும், இறுதிப்போட்டி நடைபெறுவது இங்கிலாந்து மண்ணில் ஆகும். அதுவும் மே 28ம் தேதி வரை இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு, ஒரே ஒரு வாரத்திற்குள் டெஸ்ட் ஃபார்மெட்டிற்கு மாறியாக வேண்டும். இது தான் பெரிய சவாலாக இருக்கப்போகிறது. இதே போல இங்கிலாந்து களத்தில் ஹர்திக் பாண்ட்யா போன்ற வீரர் தேவையாக உள்ளது.

இங்கிலாந்து களம்
இங்கிலாந்தில் வேகப்பந்துவீச்சு தான் எடுபடும். எனவே பேட்டிங்கில் நல்ல ஆழம் தர வேண்டும், அதே போல அதிரடி காட்டினால் இன்னும் சிறப்பாக ரன் குவிக்கலாம். இங்கிலாந்து அணி அவர்களது மண்ணில் பேஸ்பால் என்ற அதிரடி முறையை பயன்படுத்தி தான் வெற்றி கண்டு வருகின்றனர். எனவே ஹர்திக் பாண்ட்யா நிச்சயம் அதற்கு சரியாக இருப்பார்.

பாண்ட்யா விளக்கம்
இந்நிலையில் டெஸ்ட் அணிக்கு தற்போதைக்கு வர மாட்டேன் என ஹர்திக் பாண்ட்யா வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நான் பலமான ஃபார்மில் தான் இருக்கிறேன். ஆனால் டெஸ்ட் அணிக்கு செல்வதற்காக 10 சதவீதம் கூட தகுதிப்பெறவில்லை. ஏன், ஒரு சதவீதம் கூட தயாராகவில்லை என்றுக்கூறுவேன். எனவே அணியில் தகுதியுடன் உள்ள வேறு ஒரு வீரரின் இடத்தை பறிப்பது சரியாக இருக்காது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் நான் விளையாட மாட்டேன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வர வேண்டும் என்று தோன்றினால், நான் அதற்காக கடுமையான முயற்சிகளை செய்து, எனக்கான இடத்தை நானே உருவாக்கிக்கொள்வேன். அதுவரையில் இந்தியாவின் எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் நான் விளையாட மாட்டேன் என ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











