பாண்ட்யாவின் மைல்கல்
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையை நிகழ்த்தினார். ஆட்டத்தின் 8வது ஓவரில் பிராண்டன் கிங் விக்கெட்டை கைப்பற்றினார். டி20 கிரிக்கெட்டில் ஹர்திக்கின் 50வது விக்கெட் இதுவாகும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட் மைல்கல்லை எட்டிய 8வது வீரர் ஹர்திக் பாண்ட்யாவாகும். இவருக்கு முன்பாக பும்ரா, யுவேந்திர சாஹல், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் எடுத்துள்ளனர்.
ஸ்பெஷல் ரெக்கார்ட்
ஆனால் பேட்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா 800 ரன்களை ( 802 ) கடந்துள்ளார். இந்திய டி20 வரலாற்றில் 50 விக்கெட்கள், மற்றும் 800 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமை ஹர்திக் பாண்ட்யாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. முன்னணி வீரரான ஜடேஜா கூட இதுவரை இந்த மைல்கல்லை எட்டவில்லை.
அஃப்ரிடி வரிசையில் பாண்ட்யா
சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்யும் 9வது வீரர் ஹர்திக் பாண்ட்யா ஆகும். இதற்கு முன்பாக சகிப் அல் ஹசன், சாஹித் அஃப்ரிடி, டுவைன் பிராவோ, ஜார்ஜ் டாக்ரெல், முகமது நமி, முகமது ஹஃபீஸ், கெவின் ஓ பிரைன், திஷாரா பெராரா ஆகியோர் அடித்துள்ளனர்.
ஹர்திக்கின் காயங்கள்
கடந்த 2 ஆண்டுகளாக காயத்தால் பாதிக்கப்பட்டு, இந்திய அணியில் இருந்தே ஒதுக்கப்பட்டிருந்தார் ஹர்திக் பாண்ட்யா. ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக தனது புதிய பாதையை தொடங்கிய அவர், இந்திய அணியில் மீண்டும் அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.