டெல்லி: மைதானத்தில் எதிரணியின் சவால்களை சமாளித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை, ஹர்மன்பிரீத் கவுர், அரசின் சட்ட விதிகளை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, கடந்தாண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் பைனல் வரை முன்னேறியது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில், 171 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர், பலருடைய பாராட்டுகளையும் பெற்றார்.
