
அதிர்ச்சி தொடக்கம்
இந்த நிலையில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளத்தில் புற்கள் இருந்ததால், பந்துவீச்சுகு சாதகமாக மைதானம் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு தகுந்தாற்போல் இங்கிலாந்து அணி முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஷாக் கிராலி 2 ரன்களிலும் பென் டக்கட் 9 ரன்களிலும், ஒலி போப் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பதிலடி
இதனால் இங்கிலாந்து அணி 21 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் அப்போது ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் அந்த அணியின் இளம சூப்பர் ஸ்டார் ஹாரி புருக், அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஒரு புறம் பந்து, ஸ்விங் ஆனது நின்ற உடன், நியூசிலாந்து வீரர்களை வெளுத்து வாங்கினர்.

ஹாரி புருக் சதம்
சிறப்பாக விளையாடிய ஜோ ரூட், தனது சர்வதேச 29வது சதத்தை பூர்த்தி செய்தார். ஆனால் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஹாரி புருக், மைதானத்தின் நான்கு பக்கமும் பந்துவீச்சை சிதறடித்தார். இதனால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் செய்வது அறியாமல் திகைத்து போய்விட்டனர். 169 பந்தில் 184 ரன்களை விளாசிய ஹாரி புருக் இன்று ஒரு மகத்தான சாதனையை செய்துள்ளார்.

புதிய சாதனை
அதன் படி, 9 டெஸ்ட் இன்னிங்சில் களமிறங்கி 800 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஹாரி புருக் படைத்துள்ளார். இதற்கு முன்பு வினோத் காம்பிளி 798 ரன்களும், ஹேர்பர்ட் 780 ரன்களும், சுனில் கவாஸ்கர் 778 ரன்களும், எவர்டன் 777 ரன்களும் அடித்திருந்தனர். இவர்களை எல்லாம் முந்தி ஹாரி புருக் தற்பாது வரை 807 ரன்கள் அடித்து இன்னும் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். ஹாரி புருக்கை ஐபிஎல் ஏலத்தில் ஐதராபாத் அணி 13 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











