அம்மாடியோவ்.. உலகின் 3வது பணக்கார கிரிக்கெட் வீரர்.. அருவி போல் கொட்டும் வருமானம்
மும்பை: உலகின் மூன்றாவது பணக்கார கிரிக்கெட் வீரர் யார் என்று பார்க்கலாம். கோடிகள் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்கலாம். பார்த்து கவனமா இருங்க.
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்பஸ் (Forbes) அமெரிக்க வணிக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் யார் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
அதன்படி, உலகின் டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் அடங்கிய பட்டியலை ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டது. விளையாட்டு ஊதியம், விளம்பரம், சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கி இந்த லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, 'Forbes' எனும் பிராண்டில் தங்கள் பெயர் வருவதையே விளையாட்டு வீரர்கள் பெருமையாக எண்ணுவார்கள்.

மிரட்டலான முதல் இடம்
2021 ஆண்டுக்கான டாப் 10 பணக்காரர் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், கலப்பு தற்காப்பு கலை வீரர் Conor McGregor 180 மில்லியன் டாலர் வருமானத்துடன் முதலிடம் பிடித்திருந்தார். கடந்தாண்டு டாப் லிஸ்டில் இருந்த ரொனால்டோ, மெஸ்ஸி, ஃபெடரர் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி, முதன் முதலாக முதலிடம் பிடித்தார் McGregor. இரண்டாம் இடத்தை பிடித்தது லயோனல் மெஸ்ஸி. வருமானம் 130 மில்லியன் டாலர். சரியாக McGregor-ஐ விட 50 மில்லியன் டாலர் குறைவு. மூன்றாம் இடத்தில் கிறிஸ்டியானால் ரொனால்டோ இருக்கிறார். இவரது வருமானம் 120 மில்லியன் டாலர்.

சச்சின் டெண்டுல்கர்
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், கிரிக்கெட்டில் யார் டாப் என்பதே நம்மூர் ரசிகர்களின் கேள்வி. இதற்கு பதில், தி கிரேட் 'சச்சின் டெண்டுல்கர்' என்று கடந்த வாரம் நமது தளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தார். Sportingfree.comன் அறிக்கையின் படி, சச்சின் தான் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர். இவரின் சொத்து மதிப்பு ரூ.1090 கோடி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், இன்னும் பல பிராண்ட்கள் மூலமும், ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார்.

குவியும் வருமானம்
அதேபோல், உலகின் 2வது பணக்கார கிரிக்கெட் வீரராக வலம் வருபவர் 'தல' தோனி என்பதையும் பார்த்தோம். இவரது சொத்து மதிப்பு ரூ.767 கோடி. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டாலும், சென்ற ஆண்டு தான் சர்வதேச லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டிலும் இருந்து தோனி ஓய்வு பெற்றார்.

நம்ம கிங் கோலி
இன்று, உலகின் மூன்றாவது பணக்கார கிரிக்கெட் வீரர் யார் என்று பார்க்கலாம். இவருக்கு பெரியளவில் அறிமுகம் தேவையில்லை. இந்திய ரசிகர்கள் இவர் 'கிங்' என்று அழைப்பார்கள். யெஸ்.. நம்ம கேப்டன் விராட் கோலியே தான். இவரது சொத்து மதிப்பு ரூ.638 கோடி. இந்திய கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களுக்கும் கேப்டனாக இருக்கும் கோலிக்கு சொந்தமாக 'Wrogn' எனும் பேஷன் பிராண்டு நிறுவனம் உள்ளது. அதேபோல், Puma-வுடன் இணைந்து One8 எனும் நிறுவனமும் நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications