
நாக்பூரில் 6வது போட்டி
இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 6-வது ஒரு நாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது.

ஆஸி.. அபாரம்
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 350 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக வாட்சன் 102 ரன்களும், பெய்லி 156 ரன்களும் எடுத்தனர்.

இமாலய இலக்கு
351 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற முடியும் என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் இந்திய அணி வீரர்கள் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர்.

இந்தியா வெற்றி
இந்திய அணி 49.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கான 351 ரன்களை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக சர்மா 79 ரன்களும், தவான் 100 ரன்களும் எடுத்தனர்.

கோஹ்லி அபாரம்
விராத் கோஹ்லி 61 பந்துகளில் 115 ரன்களும் குவித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.


Click it and Unblock the Notifications