
14 ஆண்டுகள் கிரிக்கெட்
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் கடந்த 1996 முதல் 2010 வரையில் அனைத்து வகையான போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.

சொந்த மண்ணில் போட்டி
இந்நிலையில் கடந்த 2007ல் சொந்த மண்ணில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் ரசிகர்களை குரூரமான விலங்குகள் என்று தரக்குறைவாக பேசியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தடை
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகர்களை குரூரமான விலங்குகள் என கிப்ஸ் திட்டியது ஸ்டெம்பில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோபோனில் பதிவானது. இதையடுத்து அவருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்தது.
டிவிட்டரில் பதிலளித்த கிப்ஸ்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் தற்போது ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹெர்ஷல் கிப்ஸ், தன்னுடைய மனைவி மற்றும் மகனை இருக்கையில் இருந்து ரவுடித்தனமாக பாகிஸ்தான் ரசிகர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் தான் கோபமடைந்து அந்த வார்த்தைகளை பிரயோகித்ததாக கூறியுள்ளார்.

டிவிட்டரை நிறையவிட்ட ரசிகர்கள்
இந்நிலையில், கிப்சின் இந்த பதிவிற்கு அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது ஆதரவு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். உண்மையை கூறியதற்கு ஐசிசி எதற்கு தண்டனை அளித்தது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications