
வெளியேறிய இந்திய அணி
வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற அத்தொடரின் முதல் போட்டியிலேயே கத்துக்குட்டி அணியான வங்கதேசத்திடம் ராகுல் டிராவிட் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பிறகு, பெர்முடாவை போட்டு துவைத்து எடுத்து, 400 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றிப் பெற்றாலும், அடுத்த போட்டியில் மீண்டும் இலங்கையிடம் தோற்க, லீக் சுற்றோடு தொடரை விட்டு வெளியேறியது இந்திய அணி. ரசிகர்களை அந்த தோல்வியை சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கோபத்தில் சுற்றிய ரசிகர்கள்
இந்திய அணி வீரர்கள் இந்தியா வந்திறங்கிய போது, வீரர்களின் பேருந்துக்கு முன்னேயும், பின்னேயும் சைரன் சப்தம் ஒலிக்க, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து அனுப்பி அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து ஒருமுறை மனம் திறந்த தோனி, "ஏதோ செய்யக் கூடாத தவறை செய்துவிட்டு நாடு திரும்பியது போல, போலீஸ் எங்களை அழைத்துச் சென்றதை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை" என்று கூறியிருந்தார். அதற்கு முன்பே, ராஞ்சியில் புதிதாக தோனி கட்டிக் கொண்டிருந்த வீட்டின் கட்டிட பணிகளை ரசிகர்கள் சேதப்படுத்தினர். மேலும் தோனியின் உருவப்படத்தையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

இது நிரந்தரம் அல்ல
இந்த நிலையில், உலகக் கோப்பை தோல்வி குறித்து தற்போது பேசியுள்ள இர்பான் பதான், "எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. வெஸ்ட் இண்டீசில், உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு என்னிடமும், மகேந்திர சிங் தோனியிடமும் வந்த கேப்டன் டிராவிட், 'நாம் அனைவரும் வருத்தத்தோடு இருப்பதை நான் அறிவேன். நாம் எல்லோரும் ஒரு படத்திற்கு செல்லலாம்' என்றார். நாங்களும் திரைப்படம் பார்க்கச் சென்றோம். பிறகு அவர் எங்களிடம், ஆம்.. நாம் உலகக் கோப்பையை இழந்துவிட்டோம். நாம் இனி ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். இதுவே நிரந்தர முடிவு அல்ல. வாழ்க்கை மிகவும் பெரியது. நாம் நாளை மீதும் திரும்பி வருவோம். டிராவிட் அப்படியொரு அருமையான கேரக்டர்.

அது தான் டிராவிட்
இப்போது அவர் இந்திய 'ஏ' அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். ஒருவேளை அங்கு ஏதாவது ஒரு வீரரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை எனில், நிச்சயம் முதல் ஆளாய் டிராவிட் அந்த வீரருக்கு பக்கபலமாக நிற்பார். அந்த வீரரை உற்சாகப்படுத்தி, நம்பிக்கை ஏற்படுத்தி மேலே கொண்டு வந்துவிடுவார். அது தான் டிராவிட்" என்று பதான் புகழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications