எப்படி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தே ரஹானேவின் கேப்டன்சி அதிகம் கவனிக்கப்பட்டது. அந்த போட்டியில் அஸ்வின் 10 ஓவர்கள் முடிந்த உடனேயே பவுலிங் செய்ய வந்தது ஆச்சர்யம் அளித்தது. ஸ்பின் பவுலரை ரஹானே விரைவாக களமிறங்கியது பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.
அஸ்வின்
அதேபோல் அஸ்வின் பவுலிங் போட வந்து சில நிமிடங்களில் விக்கெட்டுகளை எடுக்க தொடங்கினார். முக்கியமாக ஸ்மித் விக்கெட்டை அஸ்வின் எளிதாக வீழ்த்தினார். ஸ்பின் பவுலரை புதிய பந்தில், அதுவும் டெஸ்ட் போட்டியில் வீச வைத்து விக்கெட் எடுக்கப்பட்டது பெரிய வரவேற்பை பெற்றது.
ரஹானே
இதற்காக ரஹானேவின் கேப்டன்சியை எல்லோரும் பாராட்டி வந்தனர். ஆனால் உண்மையில் இது ரஹானேவின் கேப்டன்சியால் ஏற்பட்டது இல்லை. இது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கொடுத்த ஐடியா என்கிறார்கள். ஆம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான் அஸ்வினிடம் முன்பே ஓவர் போடும்படி கூறியுள்ளார்.
பந்து ஸ்விங் ஆகும்
பிட்ச் ஸ்பின் செய்ய தோதுவாக இருக்கும். அஸ்வின் முன்பே பவுலிங் செய்தால் விக்கெட் விழும் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அஸ்வின் உட்பட எல்லோரும் மிரண்டு போய் உள்ளனர். அது எப்படி விக்கெட் விழும் என்று சந்தேகத்தில் இருந்துள்ளனர்.
ஆச்சர்யம்
ஆனால் மைதானத்தில் சென்று பார்த்தால் பந்து ரவி சாஸ்திரி சொன்னபடி ஸ்விங் ஆகியுள்ளது. இதை பார்த்து அஸ்வின் மிரண்டு போய் உள்ளார். இப்படி இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பல இடங்களில் இந்திய அணிக்கு மிக முக்கியமான அறிவுரைகளை வழங்கி உள்ளார்.