
டிக்கெட்டுக்கு படு கிராக்கி
சச்சின் விளையாடும் கடைசி ஆட்டத்தை காண அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் உள்ள ரசிகர்கள் டிக்கெட் கேட்கிறார்கள். ஆனால் அந்த ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர்கள், எங்கள் கிளப் உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கு டிக்கெட் வழங்குவது என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். அதனால் பொது மக்களுக்கு எத்தனை டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று கூற முடியாது என்றார் பவார்.

2,000 டிக்கெட் கேட்கவில்லை
இறுதி ஆட்டத்தின்போது தனக்கு 2,000 டிக்கெட்டுகள் வேண்டும் என்று சச்சின் கேட்டதாக வந்த தகவலில் உண்மை இல்லை. அவர் ஒரு டிக்கெட் கூட கேட்கவில்லை. மும்பை கிரிக்கெட் சங்கம் தான் அவருக்கு 500 டிக்கெட்டுகள் கொடுப்பது என்று நேற்று முடிவு செய்தது என்று பவார் தெரிவித்தார்.

புத்தகம்
சச்சின் விளையாடிய போட்டிகள் குறித்த அனைத்து புள்ளிவிவரங்களுடன் 150 முதல் 160 பக்கங்களுடன் கூடிய புத்தகத்தை அச்சடித்து கொடுக்கநாக்பூரில் உள்ள பதிப்பகம் ஒன்று முன் வந்துள்ளதாக பவார் தெரிவித்தார்.

ஷாருக்கான்
வாங்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் சச்சினின் கடைசி ஆட்டத்தை பார்க்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அனுமதிக்கப்படுவாரா என்று பவாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், மும்பை கிரிக்கெட் சங்க வளாகத்திற்குள் அனுமதிக்கப்படும் அனைவரும் வந்து போட்டியைக் காணலாம் என்றார்.

ஷாருக்கானுக்கு தடை
கடந்த 2012ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடந்தபோது மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் பிரச்சனை செய்தார் ஷாருக்கான். இதையடுத்து அவர் ஸ்டேடியத்திற்குள் நுழைய 5 ஆண்டுகள் தடை விதித்து மும்பை கிரிக்கெட் சங்கம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications