
பேட்டிங் வரிசை
இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் மீது உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்தப்படும் வகையில், நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி நிர்வாகம் செயல்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் 13 புள்ளி 3 வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்த போது, அந்த இடத்தில் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும்.

வாய்ப்பு கிடைத்திருக்கும்
தினேஷ் கார்த்திக் அப்போது களத்திற்கு வந்திருந்தால், தன்னை நிலைநிறுத்தி கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும். அதன் பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்திருப்பார். ஹர்திக் பாண்டியாவுக்கும் கொஞ்சம் அழுத்தம் குறைந்திருக்கும். இந்திய அணியின் ஸ்கோரும் ஒரு 20 ரன்கள் கூடுதலாகி இருந்திருக்கும்.

ஆட்டமிழப்பு
ஆனால், நேற்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அக்சர் பட்டேலை இந்திய அணி நிர்வாகம் இறக்கிவிட்டது. இதனையடுத்து கடைசி கட்டத்தில் கார்த்திக் களத்திற்கு வந்தார். அந்த தருணத்தில் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும் என்ற நெருக்கடி கார்த்திக்கிற்கு ஏற்படுகிறது. அப்போது அவர் அதிரடியாக ஆடும் போது, குறைந்த ரன்னில் ஆட்டமிழக்கவும் வாய்ப்பு உண்டு.

ரசிகர்கள் புகார்
அப்படி அவர் ஆட்டமிழந்தால், இதனையே காரணம் காட்டி தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு ரிஷப் பண்டை அணியில் சேர்க்க திட்டம் தீட்டப்படுவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஃபினிஷர் ரோலில் இருக்கும் நபரின் தலைக்கு மேல் கத்தியை தொங்கவிட்டால், நிச்சயம் அவரால் சோபிக்க முடியாது. இருப்பினும், இதனை தினேஷ் கார்த்திக் உடைப்பார் என்ற நம்பிக்கை தமிழக ரசிகர்கள் மத்தியில் உள்ளது.


Click it and Unblock the Notifications











