என் முதுகில் குத்த சக வீரர்களே தயாராக உள்ளனர்… ஒரு கேப்டனின் ஓபன் டாக்.. ஐபிஎல் உலகம் அதிர்ச்சி
கொல்கத்தா: கொல்கத்தா டீமில் முதுகில் குத்துபவர்கள் இருக்கிறார்கள் என்று அந்த அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
வழக்கம் போலவே நடப்பு தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர், அற்புதமாக தொடங்கினர். ஆனால் எதிர்பாராத விதமாக தொடர்ந்து 6 போட்டிகளில் தோற்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முக்கிய போட்டி ஒன்றில் ஆடியது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அருமையாக ஆடியது.

அதிக ரன்கள்
20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது. அதிக பட்சமாக ரசல் 80 ரன்களும், கில் 76 ரன்களும் குவித்தனர். கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியினர் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

கொல்கத்தா வெற்றி
பின்னர் ஹர்திக் பாண்டியா ருத்ரதாண்டவம் எடுத்தார். 34 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார். அதில் 9 சிக்சர்கள். ஆனால் 198 ரன்களே எடுக்க முடிந்தது. 34 ரன்களில் கொல்கத்தா வெற்றி பெற்றது.

பிளே ஆப் கடினம்
தற்போது அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது. இந் நிலையில் கேப்டன் தினேஷ் கார்த்திக் தன்னுடைய கேப்டன்ஷிப்பில் ஏற்படும் நெருக்கடிகள் பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார்.

பின்னால் பேசும் நபர்கள்
அதில் அவர் கூறியிருப்பதாவது: தன்னுடைய கேப்டன்ஷிப் பற்றி நிறைய பேர் பின்னால் பேசுவது தெரியும். அதனை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. இது ஒரு பெரிய தொடர். இது போன்று நடப்பது புதிதல்ல. ரசல் மிகப்பெரிய விளையாட்டு வீரர், விலை மதிப்பில்லா வீரர் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications