
அடுத்தடுத்து 3 முட்டை
இந்தத் தொடரின் ஆரம்பத்தில் முதல் 3 போட்டிகளில் அவர் வரிசையாக டக் அவுட் ஆனார். 4வது போட்டியில் ஒரே ஒரு ரன் எடுத்தார். அடுத்த போட்டியில்தான் சற்று ஆடினார்.

வரலாறு காணாத டபுள் டை
அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டியின்போது போட்டி டை ஆனது. பின்னர் வீசப்பட்ட சூப்பர் ஓவரிலும் போட்டி டை ஆனது. கடைசியில் பவுண்டரிகள் அடிப்படையில் ராஜஸ்தான் வென்று விட்டது. கம்பீர் பெரும் ஏமாற்றத்துக்குள்ளானார்.

இப்போது ஹாட்ரிக் வேதனை
இந்த நிலையில் தற்போது அதே ராஜஸ்தானுடன் நடந்த 2வது போட்டியிலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக மாறிப் போய் விட்டது.

தாம்பே ஹாட்ரிக்கால் அதிர்ச்சி
ராஜஸ்தான் பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே கடைசி நேரத்தில் அதிரடியாக, அரிய வகை ஹாட்ரிக்கை நிகழ்த்தியதை கம்பீர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பெரும் சோகமாகி விட்டார்.

இப்படி பார்த்ததே இல்லை
இதுகுறித்து கம்பீர் கூறுகையில், இப்படிப்பட்ட கிரிக்கெட்டை நான் பார்த்ததே இல்லை. இதை ஜீரணிக்கவே முடியவில்லை.

ஆனால் என்ன செய்வது
ஆனால் என்ன செய்வது. இதை நாம் மறந்து விட்டு அடுத்த போட்டிக்குப் போக வேண்டும்.இன்னும் எட்டுப் போட்டிகள் உள்ளன. அதை வென்றாக வேண்டும். பந்து வீச்சில் சுனில் நரீன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் தவிர மற்றவர்களும் திறமையாக வீச வேண்டும் என்றார் கம்பீர்.


Click it and Unblock the Notifications











