
மொத்தம் 39 ரன்கள்
இறுதியில் இந்த ஜோடி 31 பந்துகளில் 39 ரன்கள் மட்டும் எடுத்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தது. அதில் இருவரும் 20 சிங்கிள் ரன்கள் அடித்தனர். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்ததோடு, கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது. கிரிக்கெட் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என்று ஆளுக்கு ஒரு பக்கம் இருவரையும் பிரித்து மேய்ந்து தள்ளினர்.

ரோகித் ஆதரவு
இந்த சூழ்நிலையில், ஹிட் மேன் ரோகித் ஷர்மா இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், தோனி மற்றும் கேதார் இருவரும் பவுண்டரிகள் அடிக்க முயன்றனர்.

ஆடுகளம் மந்தம்
ஆனால் அந்த நேரத்தில் ஆடுகளம் மந்தமாக இருந்தது. ஆகையால் தான் அவர்களால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. அதை இங்கிலாந்து அணியினர் அழகாக பயன் படுத்திக் கொண்டனர். இங்கிலாந்து பவுலர்கள் ஸ்லோ பால்களை அதிகமாக வீசினர். அத்துடன் இங்கிலாந்து பந்துவீச்சை சரியாக கணிக்க முடிய வில்லை என்றார்.

முயற்சியே செய்யவில்லை
தோனி, கேதாருக்கு இவர் வக்காலத்து வாங்கியிருப்பது ரசிகர்களை மேலும் கோபம் அடைய செய்திருக்கிறது. கடைசி 5 ஓவர்களில் 71 ரன்கள் தேவைப்பட்டது. கடின இலக்குதான் என்றாலும் அதை எடுக்க முயற்சியாவது செய்திருக்க வேண்டும்.

இருவரும் செய்தது என்ன?
ஆனால்.... கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை. இங்கிலாந்து மெதுவாக வீசி அடிக்க விடாமல் செய்துவிட்டதாக கூற முடியாது. அடித்து ஆட முயற்சித்து, சரியாக அடித்து ஆடமுடியவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் தோனியும், கேதாரும் என்ன செய்தார்கள்?

50 ஓவர்கள் தான் முக்கியம்
இருவரும் எந்த முயற்சியும் செய்த மாதிரியே செய்யவில்லை. வெற்றி இலக்கை விரட்டுவதற்காக ஆடுகிறார்களா அல்லது 50 ஓவர்களை முழுமையாக விளையாட வேண்டும் என்ற கடமைக்காக ஆடியது போன்று இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications