டிஎன்பிஎல் புரமோஷன்
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியை புரமோட் செய்வதற்காக வந்திருந்தார் கெய்ல். வந்த இடத்தில் டிஎன்பிஎல்லின் இணையதளத்திற்கு அவர் ஒரு பேட்டி கொடுத்தார். அதில், என்னுடைய கிரிக்கெட் திறமையை விட டான்ஸ் திறமை குறித்துத்தான் பலரும் பேசுகிறார்கள். இது மகிழ்ச்சி தருகிறது, உற்சாகம் தருகிறது.
டான்ஸ் ஷோ நடத்திடலாம்
ரசிகர்களுக்கு என்னுடைய டான்ஸ் பிடித்துள்ளது. பலரும் அதைப் பற்றித்தான் அதிகம் கேட்கிறார்கள். நானும் மேலும் சில மூவ்மென்ட்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அதை விரைவில் வெளிப்படுத்துவேன். ரசிகர்களின் ஆதரவைப் பார்க்கும்போது பேசாமல் ஒரு டான்ஸ் ஷோ நடத்தலாம் போல.
ரசிகர்களிடமிருந்தும் கற்கிறேன்
ரசிகர்கள் என்னை விட நன்றாகவே ஆடுகின்றனர். அவர்களிடமிருந்தும் நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். இது செம வேடிக்கையாகவும் இருக்கிறது. அவர்களிடமிருந்து கற்று அவர்களுடன் இணைந்து ஆடுவது வித்தியாசமானது என்றார் கெய்ல்.
கெய்ல் - பிராவோ
கெய்ல் மட்டுமல்லாமல் வேயன் பிராவோவும் சென்னை வந்திருந்தார். இருவரும் டிஎன்பிஎல் தொடருக்கான புரமோஷனுக்காக வந்திருந்தனர். இந்திய ஐபிஎல் தொடரில் முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியவர் பிராவோ. கெய்ல் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் கல்லூரியில் டான்ஸ்
முன்னதாக சென்னை வந்திருந்த கெய்ல், எம்ஓபி வைஷ்ணவா மகளிர் கல்லூரிக்கு விஜயம் செய்து அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவர்களுடன் இணைந்தும் டான்ஸ் போட்டார். அதுகுறித்து கேட்டபோது மாணவிகளின் அன்பு சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார் கெய்ல். மேலும் அவர் கூறுகையில் அவர்கள் போட்ட ஆட்டத்தையும், சத்தத்தையும் பார்த்து எனக்கு காது ஜவ்வே கிழிந்து விடும் போல இருந்தது. அப்படி ஒரு சத்தம் போட்டு உற்சாகமாக ஆடினார்கள் என்றார்.