மீண்டும் ஜடேஜா
வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஜடேஜாவுக்கு இடம் கிடைத்துள்ளது.
ரஞ்சியில் அபாரம்
ஜடேஜாவுக்கு மீண்டும் அணியில் இடம்கிடைக்க அவர் ரஞ்சி கோப்பை தொடரில் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவதே காரணம். சவுராஷ்டிரா அணிக்காக ஆடும் ஜடேஜா, வெறும் 2 போட்டிகளில், 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2 அரை சதங்கள் கடந்துள்ளார்.
ப்ரெஷ்
இதுகுறித்து ஜடேஜா கூறுகையில், நான் கடந்த நான்கு மாதங்களாகவே நான் கிரிக்கெட் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ரஞ்சி கோப்பைக்கு முன்பாக கிரிக்கெட் பற்றி நினைக்க கூடாது. ஃபிரெஷ்ஷாக வர வேண்டும் என்று திட்டமிட்டு எனது பண்ணைக்கு சென்றேன்.
குதிரைகளோடு கொஞ்சல்
பண்ணையில் குதிரைகளோடு கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தேன். நண்பர்கள் வீடுகளுக்கு சென்றேன். சேர்ந்து ஊர் சுற்றினேன். இசை கேட்டேன். பேட்டையோ, பந்தையோ கையால் கூட தொடவில்லை. எனவேதான் ரஞ்சியில் சிறப்பாக ஆட முடிந்தது. இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார்.