
பாசிட்டிவாக எடுத்துக் கொண்டேன்
டோணி பாய் கூறியதை நான் பாசிட்டிவாகவே எடு்த்துக் கொண்டேன். அதிலிருந்து விடுபட்டு விட்டேன். வங்கதேச டூர் தற்போது முடிந்து போன ஒன்று.

நிலையாக ஆட வேண்டும்
ஒரு நாள் போட்டிகளில் நிலையாக, ஸ்திரமாக ஆட வேண்டும் என்பது மட்டுமே எனது மனதில் இப்போது இருக்கிறது.

சீனியராவது, ஜூனியராவது
வீரர்களை வீரர்களாக மட்டுமே பார்க்க வேண்டும். மாறாக ஜூனியர்கள், சீனியர்கள் என்று பார்க்கக் கூடாது. 15 வீரர்களுமே முக்கியமானவர்கள்தான். அவர்களது திறமையை மதிக்க வேண்டும்.

எல்லோரும் ஆதரவாக உள்ளனர்
எனக்கு அனைத்து வீரர்களும் ஆதரவாக உள்ளனர். ஒரு கேப்டனாக, எனக்கென்று சில ஐடியாக்கள் உள்ளன. அதற்கேற்ப நான் விளையாடுவேன் என்றார் ரஹானே.

பஜ்ஜுப்பா...!
தொடர்ந்து ரஹானே கூறுகையில், பஜ்ஜுப்பா (அதாவது ஹர்பஜன் சிங்), எப்போதுமே இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளர். அவர் அணியில் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது. தேவைப்படும்போது அவரது ஆலோசனைகளைப் பெறுவேன். அவரது அனுபவம் அணிக்கு உதவும்.

பெஸ்ட்டாக ஆடுவோம்
199 சதவீத ஆயத்த நிலையில் நாங்கள் இருக்கிறோம். சிறப்பாக ஆடுவோம். சிறந்த வெற்றிகளுடன் திரும்பி வருவோம். கடந்த காலத்தை மறந்து விட்டு ஜிம்பாப்வே தொடருக்காக அனைவரும் மனதளவில் தயாராகி விட்டனர் என்றார் ரஹானே.


Click it and Unblock the Notifications











