
கனவா? நிஜமா?
இதுகுறித்து கேமரூன் கிரீன் கூறுகையில், ஐபிஎல் மினி ஏலத்தில் நான் அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட போது, இது கனவா அல்லது நிஜமா என்று என்னை நானே கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. அதேபோல் முதல்முறையாக எனக்காக ஐபிஎல் ஏலத்தை பார்த்தது வித்தியாசமாக இருந்தது.

உடலில் நடுக்கம்
ஐபிஎல் ஏலத்தில் என் பெயரை சொன்ன போது, என் உடலில் நடுக்கம் ஏற்பட்டது. ஒவ்வொரு அணியும் எனக்காக ஏலம் கேட்ட போது, நடுக்கம் அதிகரித்து கொண்டே போனது. கடைசியாக மும்பை அணி என்னை வாங்கியதாக அறிவிக்கப்பட்ட பின்னரே, எனது நடுக்கம் குறைந்தது. எப்போதும் ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய ரசிகன். ஒவ்வொரு ஆண்டிலும் ஐபிஎல் தொடரை பின் தொடர்ந்து வருகிறேன்.

மும்பை இந்தியன்ஸ்
இப்போது ஐபிஎல் தொடரின் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐபிஎல் தொடரின் மிக முக்கிய அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். அந்த அணியுடன் இணைவதில் பெருமையாக இருக்கிறது. எப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என்று ஆவலுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

மும்பை அணி மகிழ்ச்சி
கேமரூன் கிரீனை வாங்கிய பின் மும்பை அணி நிர்வாகிகள் பெரிய அளவில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், கேமரூன் கிரீனை தொடர்ந்து 2 முதல் 3 ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம். மும்பை அணியின் மிகச்சிறந்த வீரராக கேமரூன் கிரீன் இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications