
டெல்லி: ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் இயான் சாப்பல், தற்போது நடந்து வரும் இங்கிலாந்து - இந்தியா தொடர் குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பாக ஹர்திக் பண்டியா, தனது பேட்டிங் குறித்த நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனவும், இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உடைய பந்து வீச்சை பார்த்து தனது பந்துவீச்சை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
