லண்டன்: இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி டக் அவுட் ஆகி ரசிகர்களை அதிர வைத்தார்.
இந்தியா, இலங்கை இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடந்தது. இந்தியா முதலில் பேட் செய்தது. அப்போது கேப்டன் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் கோஹ்லி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
5 பந்துகளை மட்டுமே சந்தித்த கோஹ்லி பெர்னாண்டோ பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
கோஹ்லி அவுட்டான காட்சி வீடியோ: