லண்டன்: இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லிக்கும், பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் இடையே மோதல் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், கும்ப்ளே பந்து வீச்சில் பேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார் விராட் கோஹ்லி.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில், நாளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மோத உள்ள நிலையில், கும்ப்ளே பந்து வீச்சில் வலைப் பயிற்சி எடுத்துள்ளார் கோஹ்லி.

பாகிஸ்தானின் சுழற் பந்து வீச்சை எதிர்கொள்ள கும்ப்ளேவிடம் பெறும் பயிற்சி உதவிகரமாக இருக்கும் என்பது கோஹ்லி எண்ணமாக உள்ளது.
முன்னதாக கோஹ்லிக்கும் கும்ப்ளேவுக்கும் மோதல் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. கும்ப்ளே தென் இந்தியாவை சேர்ந்தவர் என்பது பிசிசி நிர்வாகிகளின் மோதலுக்கு காரணம் எனவும் கூறப்பட்டது.
பிசிசிஐ நிர்வாகிகள் தூண்டுதலால் கோஹ்லிக்கும் கும்ப்ளேவுக்கும் நடுவே மோதல் இருப்பதாக ஒரு செய்தியும், கும்ப்ளே பயிற்சியாளரானது தொடக்கம் முதலே கோஹ்லிக்கு பிடிக்கவில்லை என ஒரு செய்தியும் உலவியது குறிப்பிடத்தக்கது.