விராத் கோஹ்லிக்கு கராச்சியில் என்ன வேலை??
டெல்லி: கராச்சியில் உள்ள ஒரு பீட்சா கடையில் கோஹ்லி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றால் நம்புவீர்களா. அட, இந்தப் படத்தைப் பார்த்துட்டுச் சொல்லுங்க.
கராச்சியில் உள்ள ஒரு பீட்சாக் கடைக்குப் போன முஸ்தபா சொஹைல் என்பவர் அங்கு பீட்சா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியரைப் பார்த்து ஜெர்க் ஆகி நின்று விட்டார். என்னடா இது கோஹ்லி வந்து பீட்சா தயாரிக்கிறாரே என்றும் குழம்பிப் போய் விட்டார்.

உண்மையில் அது கோஹ்லி இல்லை. கோஹ்லி போன்ற உருவம் கொண்ட பாகிஸ்தானியர்தான். உடனே தனது செல்போனை எடுத்து அந்தப் போட்டைவை பேஸ்புக் உள்ளிட்டவற்றில் போட்டார். பிறகென்ன, வழக்கம் போல வைரலானது. அந்த வீடியோவில் உள்ள நபரைப் பார்த்தால் அட கோஹ்லி என்றுதான் முதலில் சொல்லத் தோன்றும் யாருக்குமே.
இப்போது அந்த பீட்சா ஊழியர் "நானும் ரெளடிதான்" ரேஞ்சுக்குப் பிரபலமாகி விட்டார்.
Story first published: Tuesday, June 13, 2017, 12:53 [IST]
Other articles published on Jun 13, 2017


Click it and Unblock the Notifications