வெலிங்டன்: உலக கோப்பையில் நாளை இரு போட்டிகள் நடைபெற உள்ளன.
உலக கோப்பையில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து-இலங்கை அணிகள் நியூசிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை காலை 3.30 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் மோத உள்ளன.

இங்கிலாந்து 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது. இலங்கை இரு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோற்றுள்ளது. எனவே இப்போட்டியில் இங்கிலாந்து வென்றால், ஏ குரூப்பில் புள்ளிகள் பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.
இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில், குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. பாகிஸ்தான் ஏற்கனவே ஆடிய 2 போட்டிகளிலும் தோற்றுள்ளது. ஜிம்பாப்வே 3 போட்டிகளில் ஆடி 1 வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானுக்கு, வாழ்வா, சாவா போட்டியை போன்றதுதான் என்பதால் அந்த போட்டியிலும் விறுவிறுப்பு இருக்கும்.