
இந்திய போட்டி
நேற்று இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையில் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது பயிற்சி ஆட்டம்
போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு 49.3 ஓவரில் ஆல் அவுட் ஆகி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிறப்பு
இந்த போட்டியில் தோனி 78 பந்தில் 118 ரன்கள் எடுத்தார். லோகேஷ் ராகுல் 99 பந்தில் 108 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குல்தீப், சாஹல் தலா மூன்று விக்கெட் எடுத்தனர். பும்ரா 2 விக்கெட் எடுத்தார். இந்த சிறப்பான ஆட்டம்தான் இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்தது.

தோனி எப்படி
இந்த போட்டியில் தோனி முதலில் நிதானமாக ஆட தொடங்கி பின் அதிரடி காட்டினார். தோனியின் 78 பந்தில் 118 ரன்கள் எடுத்த செஞ்சுரி மிக முக்கியமான சென்டிமெண்ட் செஞ்சுரி ஆகும். பயிற்சி ஆட்டத்தில் தோனி செஞ்சுரி அடித்தால் கண்டிப்பாக இந்திய அணி கோப்பையை வெல்லும் என்ற முக்கிய சென்டிமெண்ட் வழக்கத்தில் உள்ளது.

என்ன வரலாறு
அதன்படி 2011ல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தோனி 64 பந்தில் 108 ரன்கள் எடுத்தார். அதில் இந்தியா உலகக் கோப்பை வென்றது. அதேபோல் 2013 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தோனி 77 பந்தில் 91 ரன்கள் எடுத்தார். அப்போதும் இந்தியா கோப்பையை வென்றது.

வேறு எப்போது
இந்த நிலையில் 2019ல் தற்போது இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 78 பந்தில் 113 ரன்களை தோனி எடுத்து இருக்கிறார். இதனால் இந்த உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியா சென்டிமெண்டாக வெல்லும் என்று கூறுகிறார்கள். இந்த தோனியின் ராசி இந்த முறையும் பலிக்கிறதா என்று பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











