
நவம்பரில்
இந்தத் தொடர் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரை நடத்துவதில் ஐசிசிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் சில நிபந்தனைகளை ஐசிசி விதித்துள்ளதாம். அதை வார்னேவும், சச்சினும் ஏற்றுக் கொண்டுள்ளனராம்.

காசு கொடுக்கனும்
சமீபத்தில்தான் அமெரிக்க கிரிக்கெட் சங்கத்துக்கான அங்கீகாரத்தை ஐசிசி ரத்து செய்தது என்பது நினைவிருக்கலாம். இந்தத் தொடர் மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பங்கை ஐசிசிக்குத் தர வேண்டுமாம். அந்தப் பணத்தை வைத்து ஐசிசி அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்க்க செலவிடுமாம்.

26 வீரர்கள்
இந்தத் தொடரில் சச்சின், வார்னே தவிர ராகுல் டிராவிட், மெக்கிராத், ஜாக்கஸ் கல்லிஸ், கில்கிறைஸ்ட், கங்குலி, பிரையன் லாரா, லட்சுமன், வாசிம் அக்ரம் உள்பட 26 வீரர்கள் இடம் பெறுகின்றனர். அனைவருமே முன்னாள் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3 நகரங்களில்
சிகாகோவில் உள்ள ரிக்லி பீல்ட் மைதானம், நியூயார்க்கில் உள்ள யாங்கீ ஸ்டேடியம், லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள டாட்ஜர் ஸ்டேடியம் ஆகியவற்றில் அமைக்கப்படும் டிராப் இன் பிட்ச்சில் இந்தப் போட்டிகள் நடைபெறும். அனைத்து மைதானங்களுமே பேஸ்பால் மைதானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சு பைசா தராதாம் ஐசிசி
ஐசிசி ஒப்புதல் மட்டுமே அளித்துள்ளதாம். மற்றபடி போட்டிக்கான ஏற்பாடுகளை போட்டி ஏற்பாட்டாளர்களே தங்களது செலவில் செய்து கொள்ள வேண்டுமாம். அஞ்சு பைசா கூட ஐசிசி தராதாம்.


Click it and Unblock the Notifications











