For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2017ம் ஆண்டோடு சாம்பியன்ஸ் டிராபியை ஏறக் கட்டும் ஐசிசி

மும்பை: இங்கிலாந்தில் 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரோடு அந்தத் தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளது ஐசிசி.

உண்மையில் 2013ம் ஆண்டோடு இந்தத் தொடரை ஏறக் கட்டியிருக்க வேண்டும். ஆனால் 2017 தொடர் வந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, 2017 தொடரோடு இதை நிறுத்தி விட்டு, 2019ல் புதிய ஒரு நாள் தொடரை அறிமுகப்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

வர்த்தக லாபம்

வர்த்தக லாபம்

உண்மையில் வர்த்தக ரீதியாக இந்தத் தொடரால் லாபம் கிடைப்பதைப் பார்த்துத்தான் அதை நிறுத்த மனம் வராமல் உள்ளதாம் ஐசிசி. இதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைக் கூட ரத்து செய்து விட்டது ஐசிசி.

2013ல் இந்தியா சாம்பியன்

2013ல் இந்தியா சாம்பியன்

2013 தொடரில் இந்தியாதான் சாம்பின் பட்டத்தைத் தட்டிச் சென்றது. அத்தோடு இந்தத் தொடர் முடிந்து விட்டதாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது 2017 தொடரை நடத்தவுள்ளனர்.

புதிய தொடர் வருகிறது

புதிய தொடர் வருகிறது

இருப்பினும் 2017 தொடரோடு இதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு 2019 முதல் புதிய தொடரை அறிமுகப்படுத்த ஐசிசி திட்டமிட்டு வருகிறதாம். இதில் 13 நாடுகளின் அணிகள் இடம் பெறுமாம்.

குறுகிய காலத் தொடர்

குறுகிய காலத் தொடர்

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெறவுள்ளன. 18 நாட்களுக்குள் இவை நடத்தப்படவுள்ளன என்பது குறிப்படத்தக்கது.

Story first published: Friday, June 24, 2016, 11:39 [IST]
Other articles published on Jun 24, 2016
English summary
The future of the International Cricket Council (ICC) Champions Trophy is back in doubt as the tournament could even be abolished after next year's edition in England, should a new One-Day International (ODI) league be introduced from 2019.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+