
தடை விதிக்கப்பட்ட பகுதி
இந் நிலையில் தற்போது இறுதி போட்டியின் போது இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க மைதானத்தை சுற்றியுள்ள பகுதி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக (no fly zone) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை வரும் ஜூலை 15ம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஐசிசி கிரிக்கெட் நிர்வாக குழு வெளியிட்டு இருக்கிறது.

பலுசிஸ்தான் நீதி
முன்னதாக கடந்த ஜூன் 29ம் தேதி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது மைதானத்துக்கு மேலே, பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும் என்ற பேனரை சுமந்தபடி விமானம் ஒன்று பறந்தது. அதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டனம் தெரிவித்திருந்தது.

காஷ்மீர் நீதி
தொடர்ந்து கடந்த 6ம் தேதி இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்ற பேனர் விமானம் மூலம் பறக்க விடப்பட்டது. அந்த விமானம் பறந்த சில நிமிடங்களிலேயே மீண்டும் மைதானத்துக்கு மேலே வலம் வந்த அதே விமானத்தில், இனப் படுகொலையை இந்தியா நிறுத்துக, காஷ்மீரை சுதந்திரமாக்கு என்ற வாசகம் அடங்கிய பேனர் பறந்தது.

வழக்குப்பதிவு
இதையடுத்து போட்டி நடந்து கொண்டிருந்த போது 3வது முறையாக இனப் படுகொலைக்கு உதவுவதை தவிர்க்கவும் என்ற வாசகத்துடன் விமானம் பறந்தது. அதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, ஐசிசி உதவியுடன், பிசிசிஐ வழக்கு தொடர்ந்தது.


Click it and Unblock the Notifications











