இரண்டாவது சுற்று
இதனை ஐசிசி ஏற்றுக் கொண்டதை அடுத்து, அமீரகத்தில் போட்டிகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு பிறகு ஏற்பாடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் வரும் செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடத்தப்பட உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடரும் அங்கு நடத்தப்பட உள்ளது. இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. வரும் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கும் டி20 உலகக் கோப்பை, நவம்பர் 14ஆம் தேதி நினைவடைகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகளை நடைபெறுகிறது. இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
எதிர்பார்ப்பு
ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் ஏற்கனவே இரண்டாவது சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எட்டு அணிகளும் தகுதிப் பெற்றுவிட்டன. முதல் சுற்றில் வெற்றிபெற்ற 4 அணிகளும் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்கும். போட்டிகள் அனைத்தும் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளன. இதில், குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காத்திருக்கும் நியூசிலாந்து
அதேசமயம், பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது. பாகிஸ்தானை விட, நியூசிலாந்து அணியே இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஆண்டு, நியூசிலாந்து மண்ணில் வைத்து அந்த அணியை டி20 தொடரில் இந்திய அணி விளாசியது. தொடரையும் கைப்பற்றியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்க, உலகக் கோப்பை போட்டியை நியூசிலாந்து பயன்படுத்த முனைப்போடு இருக்கும். அதேசமயம், ஆப்கானிஸ்தான் அணியிலும் உலகத் தரம் வாய்ந்த ரஷீத் கான், முகமது நபி உள்ளிட்ட வீரர்கள் இருக்கின்றனர். எனவே, இந்தியாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது எனலாம்.
மாற்று நாள்
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின் போது மழை பெய்தாலோ, அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக நிறுத்தப்பட்டாலோ, பாதிக்கப்பட்டாலோ மாற்று நாளில் போட்டி நடைபெறுமா என்பது குறித்து ஐசிசி தெளிவுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள ,அறிக்கையில், " முதல் அரையிறுதி போட்டி நவம்பர் 10 அன்று உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு அபுதாபியில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதி நவம்பர் 11 அன்று துபாயில் நடத்தப்படும். இரண்டு அரையிறுதி ஆட்டங்களுக்கும் reserve நாட்கள் உள்ளன. இறுதிப் போட்டி துபாயில் உள்ளூர் நேரப்படி நவம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும். மறுநாள் திங்கட்கிழமை (நவம்பர்.15) இறுதிப் போட்டிக்கான ரிசர்வ் நாளாக செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.