
ஐ.சி.சி. ஏற்பாடு
ஒருநாள் போட்டி அறிமுகமான பிறகு, ஒரு போட்டியின் முடிவிற்கு ஒருநாள் முழுவதும் காத்திருக்கனுமா வாய்ப்பு இல்லை என்று பரீசிலிக்கப்படவில்லை. ஆனால், டி20 போட்டிக்கு பிறகு கிரிக்கெட் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கும் பரவியது. போட்டியின் முடிவு 3 மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்பதால், கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்தது.

பி.சி.சி.ஐ. முட்டுக்கட்டை
ஆனால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்த்தால், தனியார் அமைப்பான பி.சி.சி.ஐ., மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும் என்ற ஒரே காரணத்திற்காக ஐ.சி.சி.யின் முடிவிற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒலிம்பிக்கில் இடம்பெறுவது முக்கியம் என்றும், இதற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று பலமுறை ஐ.சி.சி. நிர்வாகிகள் வலியுறுத்திய பின் பி.சி.சி.ஐ. ஒப்புதல் அளித்தது.

பணியில் தொய்வு
ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முயற்சி செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த குழு இதுவரை ஒரு முறை தான் ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த குழுவின் தலைவராக இருந்த வாட்மோர், ஒலிம்பிக் சம்மேளன் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அவரும் தனிப்பட்ட காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த பணியில் தொய்வு ஏற்பட்டது.

வாய்ப்பு குறைவு
இதனையடுத்து ஐ.சி.சி.யின் தலைவர் பார்கிலே, ஒலிம்பிக் செயல் திட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ளார். வாட்மோர் தனது பணியை சிறப்பாக செய்ததாகவும், 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற வேண்டும் என்றால் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று கிரேக் பார்கிலே கூறினார். இதற்காக 20 கோடி ரூபாயை ஐ.சி.சி. ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார். இந்த நிலையில், 2028 ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டிய விளையாட்டின் உத்தேச பட்டியலை ஐ.ஓ.சி. வெளியிட்டது. அதில் கிரிக்கெட் இடம்பெறவில்லை. இதனால் கிரிக்கெட் 2028 ஒலிம்பிக்கில் இடம்பெறுவதும் கேள்விக்குறியே.


Click it and Unblock the Notifications











