ICC U-19 பைனலில் பெண்கள் ஆபாச நடனம்..!! கிரிக்கெட் போட்டியில் அரைகுறை ஆடையுடன் பெண்கள்..!!
ஆண்டிகுவா: ஐ.சி.சி. U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய காட்சிகள், பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.
இறுதிப் போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. இதனை ஏராளமான பார்வையாளர்கள் வந்து கண்டு ரசித்தனர்.
மைதானத்திற்கு வந்த பார்வையாளர்களை குஷிப்படுத்துவதற்காக ஐ.சி.சி. சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தது.

கலிப்சோ நடனம்
மேற்கிந்திய தீவுகளில் மிகவும் பிரபலமானது கலிப்சோ நடனம். இதில் பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிந்து இடுப்பை மட்டும் ஆட்டி வினோத நடனமாடுவது அந்த நாட்டின் கலாச்சாரம் ஆகும்.இந்த கலிப்சோ திருவிழாவை பார்க்கவே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து பெண்களின் நடனத்தை பார்ப்பது வழக்கம்

அரைகுறை நடனம்
இதனால், இறுதிப் போட்டிக்காக கலிப்சோ நடனமாடும் பெண்களை ஐ.சி.சி நியமித்துள்ளது. அண்டர் 19 வீரர்கள் பவுண்டரி விளாசும் போதும், விக்கெட் எடுக்கும் போதும் இந்த பெண்கள் அரைகுறை உடையுடன் ஆபாச நடனமாடினர். இதனை தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்பட்டது.

கலாச்சாரம்
மேலும் மேற்கிந்திய தீவுகளில் வெயில் அதிகம் என்பதால், அங்கு பலரும் நீச்சல் உடையில் சூரிய குளியல் போடுவது சர்வ சாதாரணம். இதனால், அவர்கள் கலாச்சாரம் முற்றிலும் இந்தியாவுக்கு எதிர்மறையாக இருக்கும். கிரிக்கெட் போட்டி என்றால் கேட்கவா வேண்டும், பல பெண்களும் அரைகுறை ஆடையுடன் மைதானத்தில் ஓய்யாரமாக படுத்திருந்தனர்.

முகம் சுளிப்பு
பார்வையாளர்கள் பகுதியில் இருந்த ஆண்கள் சிலரும், அந்த பெண்களுடன் உற்சாகமாக நடனமாடி பார்டி செய்தனர். ஒரு புறம் இரு நாட்டை சேர்ந்த இளம் வீரர்கள் போராடினால், பார்வையாளர்கள் பகுதியில் 18 பிளஸ் காட்சிகள் தான் இடம்பெற்றது. நல்ல வேலை இந்திய நேரப்படி இரவு போட்டி நடைபெறுவதால் குழந்தைகள் எல்லாம் தூங்கி இருப்பார்கள் என்று போட்டியை பார்த்த பெற்றோர்களும் நினைத்து இருப்பார்கள்.


Click it and Unblock the Notifications