
முதல் பிளான்
இது தொடர்பாக வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் யாஷ் துல், அரையிறுதியில் எப்படி விளையாட வேண்டும். என்ன ஸ்கோர் அடிக்க வேண்டும் என்பது குறித்து முன்பே பிளான் போட்டு வைத்திருந்தோம். விக்கெட் விழாமல் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டும் என்பதே முதல் பிளான்.

பார்ட்னர்ஷிப்
அதில் கிட்டதட்ட தொடக்க வீரர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் 13 ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இதனையடுத்து நானும், ரஷித்தும் எவ்வித பெரிய ஷாட்களையும் ஆடாமல் 40வது ஓவர் வரை விக்கெட் விழாமல் விளையாட வேண்டும் என்று நினைத்தோம்.

பெரிய இலக்கு
அதன் படி, சிங்கிள்ஸ் ஆடி நெருக்கடி இல்லாமல் ரன்களை சேர்த்தோம். ஒரு அளவுக்கு நல்ல ஸ்கோர் வந்ததும் கொஞ்சம் அதிரடியை காட்டினோம். இதனால் நாங்கள் நினைத்த ஸ்கோர் வந்தது. இதன் பின்னர் மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி கடைசி 10 ஓவரில் 100 ரன்கள் அடித்துவிட்டனர். இதனால் எங்களுக்கு 290 ரன்கள் என்ற பெரிய இலக்கு கிடைத்தது.

பெருமையாக கருதுகிறேன்
பெரிய இலக்கை துரத்தும் போது, எதிரணி வீரர்கள் சிலர் தவறை செய்வார்கள். இதனால் எங்களது பந்துவீச்சாளரும் நெருக்கடி இன்றி பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்தனர். சதம் விளாசிய மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெயர் கிடைத்துள்ளது பெருமையாக கருதுகிறேன். பயோ பபுளில் இருப்பது கடினமாக உள்ளது. இருப்பினும் நாங்கள் கற்று கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications











