
அதிரடி ஆட்டம்
37 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ஷாயிக் ரஷித் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரைசதம் கடந்த பிறகு, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவுண்டரிகளை இந்த ஜோடி பறக்கவிட்டு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நெருக்கடியை தந்தனர்.

யாஷ் துல் சதம்
விராட் கோலியை போல் சிறப்பான ஷாட்களை விளையாடிய யாஷ் துல், சதம் விளாசினார். இதன் மூலம் விராட் கோலி, உன்குத் சந்த்துக்கு பிறகு U19 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் சதம் விளாசிய இந்திய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார். 110 ரன்கள் எடுத்திருந்த போது யாஷ் துல் துரதிர்ஷ்டம் விதமாக ரன் அவுட்டாகினார்.

291 ரன்கள் இலக்கு
மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரஷித் 94 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் ஹங்கர்கேகர் 1 சிக்சர், 1 பவுண்டரி விளாசி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் களமிறங்கிய தினேஷ் பானா 4 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது.
Recommended Video

அதிர்ச்சி தொடக்கம்
இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தால் அண்டர் 19 உலகக் கோப்பையில் தோற்றது இல்லை. இந்த நிலையில் 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் வெய்லி, ரவிகுமார் பந்துவீச்சில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கடந்த ஒன்பது U19 உலகக் கோப்பையில் எதாவது ஒரு ஆசிய அணியாவது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











