
இங்கிலாந்து பாதை
24 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி வந்துள்ளது. ஆனால் இங்கிலாந்து அணியின் பாதை மிகவும் எளிதாகவே அமைந்தது. குரூப் பிரிவில் வங்கதேசம், யு.ஏ.இ, கனடா ஆகிய அணிகளையும், நாக் அவுட் சுற்றில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளை மட்டுமே இங்கிலாந்து எதிர்கொண்டது.

இந்தியா பாதை
ஆனால் இந்திய அணி குரூப் பிரிவில் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளையும், நாக் அவுட் சுற்றில் வங்கதேசம் மற்றும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இருப்பினும் இரண்டு அணியிலும் திறமையான வீரர்கள் இருப்பதால் போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இன்ப அதிர்ச்சி
இந்த நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். யாஷ் துல், ஷாயிக் ரஷித், கவுசல் தாம்பே ஆகியோருக்கு வீடியோ கால் செய்து விராட் கோலி, இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டை தெரிவித்தார். மேலும், U-19 இந்திய அணி கேப்டனாக விராட் கோலி இருந்துள்ளதால், தனது அனுபவத்தையும், சில அறிவுரைகளையும் அவர் வழங்கினார்.

திரும்மபிய வரலாறு
விராட் கோலியுடன் பேசியது மிகவும் உற்சாகத்தை தந்துள்ளதாக இந்திய அணி கேப்டன் யாஷ் துல் தெரிவித்தார். இதே போன்று 2008ஆம் ஆண்டு விராட் கோலி அண்டர் 19 கேப்டனாக இருந்த போது இறுதிப் போட்டிக்கு முன் சச்சின் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கினார். தற்போது விராட்டும் அதே செயலை செய்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











