For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உடைந்து அழுத தென்னாப்பிரிக்க வீராங்கனை.. ஜெமிமா, மந்தனா செய்த நெகிழ்ச்சி செயல்.. என்ன நடந்தது?

மும்பை: 2025 மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இதயம் நொறுங்கி நின்ற தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீராங்கனைகளான லாரா வோல்வார்ட் மற்றும் மரிசான் கேப் ஆகியோரை, இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் அரவணைத்து ஆறுதல் கூறிய காட்சி, கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. என்ன நடந்தது?

நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், இந்தியாவிடம் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்தது. முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை இரு அணிகளும் இலக்காகக் கொண்டு மோதியதால், ஒரு அணியின் வெற்றி, மற்றொரு அணியின் சோகமாக மாறியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியதால், தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் கடும் துயரத்தில் ஆழ்ந்தனர்.

ICC Women WC Final 2025 Indian Players Smriti Mandhana Jemima Console Heartbroken South African Stars After World Cup Final

தோல்வியிலும் தலை நிமிர்ந்த தென்னாப்பிரிக்கா:

இந்த இறுதிப்போட்டி முழுவதும் இந்திய அணிக்குக் கடுமையான சவாலை அளித்தது தென்னாப்பிரிக்கா. குறிப்பாக, அந்த அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட், அபாரமான சதம் விளாசி இறுதி வரை போராடினார். இருப்பினும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால், அவர்களால் வெற்றிக் கோட்டைத் தொட முடியவில்லை. சொந்த மண்ணில் இந்திய அணிக்கு இந்தக் கொண்டாட்டம் எவ்வளவு பெரியதோ, அதே அளவுக்கு இந்தத் தோல்வி தென்னாப்பிரிக்க வீராங்கனைகளுக்கு எவ்வளவு பெரிய வலி என்பதையும் அந்தத் தருணம் உணர்த்தியது.

போட்டி முடிந்ததும், இந்திய வீராங்கனைகள் தங்கள் வெற்றிப் பெருமிதத்தைக் கொண்டாடிய அதே வேளையில், தோற்ற அணியின் வலியைப் பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட வீடியோவில், இந்திய வீராங்கனைகள், தென்னாப்பிரிக்க வீராங்கனைகளிடம் கை கொடுத்து, தங்களின் பாராட்டுகளையும், ஆறுதலையும் தெரிவித்த நெகிழ்ச்சியான தருணங்கள் பதிவாகியிருந்தன.

தோழமையின் வெளிப்பாடு:

இதில் அனைவரையும் ஈர்த்தது, தென்னாப்பிரிக்காவின் ஆல்-ரவுண்டர் மரிசான் கேப்பின் நிலைதான். தனது ஐந்தாவது ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடிய அவர், கோப்பையை வெல்லும் வாய்ப்புக்கு மிக அருகில் வந்து அதனைத் தவறவிட்டார். 35 வயதாகும் அவருக்கு, இதுவே கடைசி உலகக்கோப்பையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இதனால், கண்ணீருடன் மைதானத்தில் அமர்ந்திருந்த அவரை, இந்திய வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ராதா யாதவ் ஆகியோர் கட்டி அணைத்து ஆறுதல் கூறினர். மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக மரிசான் கேப், ஜெமிமா மற்றும் ராதா ஆகிய மூவரும் ஒன்றாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்திற்கு அப்பாற்பட்ட தோழமையே, இந்த இக்கட்டான தருணத்தில் அவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

மேலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட தென்னாப்பிரிக்க வீராங்கனை நடின் டி கிளர்க்குடன் உரையாடுவதும் காணப்பட்டது. இறுதியாக, இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்டிடம் பேசி அவருக்கு ஆறுதல் கூறினார்.

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என இரண்டிலுமே சதம் விளாசி, தொடரின் அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக வோல்வார்ட் திகழ்ந்தார். மகளிர் கிரிக்கெட்டின் தலைசிறந்த தொடக்க வீராங்கனைகளாகக் கருதப்படும் இவர்கள் இருவரும், ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தியது, உண்மையான விளையாட்டு வீரர்களின் மாண்பை வெளிப்படுத்தியது.

வெற்றி, தோல்வி என்பதெல்லாம் ஆட்டத்தின் ஒரு பகுதிதான். ஆனால், சக வீரரின் வலியை உணர்ந்து, ஆறுதல் கூறும் இந்த மனிதம் தான், கிரிக்கெட்டை ஒரு "ஜென்டில்மேன் விளையாட்டு" ஆக நிலைநிறுத்துகிறது. இந்திய வீராங்கனைகளின் இந்தச் செயல், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Story first published: Monday, November 3, 2025, 11:22 [IST]
Other articles published on Nov 3, 2025
English summary
ICC Women WC Final 2025: Indian Players Smriti Mandhana, Jemima Console Heartbroken South African Stars After World Cup Final
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+