என்ன காயம்
இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் கையில் காயம் பட்டது. இந்த காயம் இன்னும் சரியாக குணமாகவில்லை. தவான் பிடித்த 14வது ஓவரை கவுல்டர் நைல் வீசினார். அப்போது தவானுக்கு கட்டை விரலில் பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது அவர் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
யார் இறங்குகிறார்
இதனால் தற்போது அவரின் இடத்தில் கே எல் ராகுல் களமிறங்குகிறார். கே எல் ராகுல் தற்போது இந்திய அணியில் 4வது இடத்தில் ஆடி வருகிறார். அவரை அவரின் பழைய இடமான ஓப்பனிங்கில் ஆட வைக்க இந்திய அணி முடிவெடுத்து இருக்கிறது. தவான் வரும் வரை இவர்தான் முதல் இடத்தில் இறங்கி ஆடுவார்.
நான்காவது இடம்
இந்த நிலையில் நான்காவது இடத்தில் கே எல் ராகுலுக்கு பதில் யார் இறங்குவார் என்ற கேள்வி நிலவி வந்தது. அதற்கு நேற்று ரகசியமான பதில் ஒன்று கிடைத்தது. அதன்படி கே எல் ராகுல் இடத்தில் விஜய் சங்கர்தான் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது . இதை நேற்று மாலை அளித்த பேட்டியில் கோலியும் மறைமுகமாக தெரிவித்துள்ளார். கே எல் ராகுல் இடத்தில் ஆல் ரவுண்டர் ஒருவர் இறங்குவார் என்று அவர் கூறியுள்ளார்.
அவர் மட்டுமே
தற்போது இந்திய அணியில் களமிறங்காமல் வெளியே இருக்கும் இரண்டு ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் மட்டும்தான். இதில் ஜடேஜா நான்காவது இடத்தில் இறங்க மாட்டார் என்பதால் அது விஜய் சங்கர்தான் என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் இவர் மீது மற்ற 9 அணிகளும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது.
எப்படி அடிக்கிறார்
விஜய் சங்கர் அணியில் எப்படி பாதிப்பை ஏற்படுத்த போகிறார் என்று எல்லோரும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். ஆனால் நேற்று இந்தியா நியூசிலாந்து அணிகள் மோத வேண்டிய போட்டி தேவையில்லாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இவர் இறங்குவது ஜஸ்ட் மிஸ்ஸானது குறிப்பிடத்தக்கது.