என்ன பிரச்சனை
நேற்று நடந்த இந்த போட்டியை காண இலங்கை அணியின் முன்னாள் வீரரும் லெஜெண்டுமான சனத் ஜெயசூரியா வந்து இருந்தார். அவர் ரசிகர்கள் அமர்ந்து இருக்கும் பொது இருப்பிடத்தில் அமர்ந்து போட்டியை பார்த்தார். ரசிகர்களுடன் ரசிகராக அமர்ந்து அவர் போட்டியை கண்டுகளித்தார்.
ஏன் இப்படி
அவருக்கு ஐசிசி இரண்டு வருடங்கள் தடை விதித்து இருக்கிறது. அவரிடம் முறைகேடாக சொத்துக்கள் இருப்பதாக புகார் உள்ளது. இதனால் ஐசிசி அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவு அவரை விசாரிக்க முடிவு செய்தது. ஆனால் ஜெயசூரியா அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
|
இரண்டு ஆண்டுகள்
இதனால் இரண்டு ஆண்டுகள் ஜெயசூரியா கிரிக்கெட் வீரர்களை சந்திக்க கூடாது. அவர்களிடம் பேச கூடாது. ஐசிசி நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது. அணி நிர்வாகிகள் இருக்கும் அறைக்கு செல்ல கூடாது. ஆனால் ஜெயசூரியா சாதாரண ரசிகராக கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இருக்கும் பகுதியில் இருந்து கண்டுகளிக்கலாம்.
அனுமதி இல்லை
இதனால்தான் நேற்று ஜெயசூரியா ரசிகர்களுடன் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தனர். ஜெயசூரியாவை சுற்றி ஐசிசி சார்பாக பாதுகாவலர் ஒருவரும் நிற்க வைக்கப்பட்டு இருந்தார். ஐசிசி இதுகுறித்து கூறும் போது அவர் மீது தடை இருப்பதால் வீரர்களை அவர் சந்திப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.