என்ன நடந்தது
நேற்று களத்தில் ஜடேஜா தோனி ஆடிய வரை போட்டி இந்தியாவின் வசம் இருந்தது. ஆனால் தோனி ரன் அவுட் ஆன பின் இந்தியாவின் தோல்வி உறுதியானது. தோனி தேவையில்லாமல் 48வது ஓவரில் ரன் அவுட் ஆனார். இந்திய அணிக்கு இரண்டு ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் தோனி அவுட்டானார்.
ஆனால் என்ன
ஆனால் தோனி அவுட்டான அந்த பந்து நோ பால் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி பவர் பிளேயில் வெளி வட்டத்தில் மைதானத்தில் 5 பேர் மட்டுமே நிற்க வேண்டும். அதற்கு மேல் வீரர்கள் நின்றால் அது நோ பால் என்று கருதப்படும். தோனி அவுட்டான 48.3 பந்தில் நியூசிலாந்து அணியின் 6 வீரர்கள் வெளிவட்டத்தில் இருந்தனர்.
வாய்ப்பில்லை
இதனால் அந்த பால் நோ பால் ஆகும். தோனியின் அவுட் சர்ச்சையாகி உள்ளது. ஆனாலும் நோ பாலில் ரன் அவுட் முறையில் அவுட்டானாலும் அது அவுட்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தோனிக்கு அவுட் கொடுத்ததில் எந்த தவறும் இல்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒருவேளை எப்படி
ஆனால் ஒருவேளை இந்த 6 வீரர்கள் பீல்டிங் நின்றதை நடுவர் கவனித்து இருந்தால் நிறைய மாற்றங்கள் போட்டியில் நடந்து இருக்கும்.
5 வீரர்களை மட்டும் நிற்க வைக்கும்படி நடுவர் கேட்டு இருக்கலாம். இதனால் அந்த பந்தை எளிதாக தோனி வெளி வட்டத்தை நோக்கி அடித்து இருக்கலாம் (அந்த ஓவரில் முதல் பாலில் தோனி சிக்ஸ் அடித்தார்). வெளியில் பீல்டர்கள் இல்லாத காரணத்தால் ஹிட் அடிக்க வசதியாக இருந்திருக்கும்.
தோனி ரன் அவுட் ஆகி இருக்க வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும்.
அந்த பாலில் ஒரு ரன் வந்தது மட்டுமில்லாமல், அடுத்த பந்தில் ஃபிரி ஹிட் வந்திருக்கும்.
அந்த ஒரு தவறு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் போட்டியே மாறி இருக்கும்.