
என்ன போட்டி
பொதுவாக இந்திய அணியின் கேப்டனாக கோலி இருந்தாலும், பெரும்பாலும் தோனிதான் வீரர்களை வழி நடத்துவார். அதேபோல் கோலியும் கூட முக்கியமான நேரங்களில் தோனியிடம்தான் ஆலோசனை கேட்பார். எனக்கு எப்போதும் தோனிதான் கேப்டன் என்று இப்போதும் கூட கோலி சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் என்ன
ஆனால் நேற்று போட்டியில் நடந்த சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று போட்டியில் பாண்டியா பந்து வீசும் முன் அவரிடம் சென்று கோலி ஆலோசனை வழங்கினார். அதன்பின் கோலி, ரோஹித், பாண்டியா மூன்று பேரும் சேர்ந்து ஆலோசனை செய்தார்கள். அப்போது அங்கு வந்த தோனியை இந்த மூன்று பேரும் கண்டுகொள்ளவில்லை.
பார்க்கவில்லை
தோனியை பார்க்காமல் இந்த மூன்று வீரர்களும் பேசிக்கொண்டு இருந்தனர். அதன்பின் தோனியும் அதை பெரிது படுத்தாமல் அப்படியே அவர்களை கடந்து சென்றார். அவர்கள் பேசுவதை தொந்தரவு செய்யாமல், அவர்களிடம் வேண்டும் என்றே சென்று ஆலோசனை வழங்காமல் தோனி விலகி சென்று கீப்பிங் சைடில் நின்றார்.

ரசிகர்கள்
ஆனால் முன்பெல்லாம் தோனி இப்படி தனியாக இருந்தது கிடையாது. நேற்றுதான் முதல்முறை இப்படி நடந்தது. நேற்று பெரும்பாலும் ரோஹித் சர்மா, கோலி இரண்டு பேர் மட்டும்தான் மாறி மாறி ஆலோசனை செய்தனர்.
தலைவன்
இந்த வீடியோ ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதே சமயம் சிலர் தோனி இளைஞர்களுக்கு வழிவிட்டு விலகி நிற்கிறார். இதுதான் சரியான விஷயம். அவர் வருங்காலத்திற்கு வழி விடும் தலைவன் என்று பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











