என்ன முடிவு
இந்த மீட்டிங்கில் இந்திய அணியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதன்படி கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்குவதற்கு வாய்ப்புள்ளது. கோலி பெரும்பாலும் டெஸ்ட் அணிக்கு மட்டுமே இனி கேப்டனாக இருப்பார் என்று கூறுகிறார்கள்.
ஒருநாள் அணி
மாறாக ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆம் டெஸ்ட் அணிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் அணிக்கு ஒரு கேப்டன் என்று இரண்டு கேப்டன்களை இந்திய அணி நியமிக்க உள்ளது. 2023 உலகக் கோப்பைக்காக இந்த முடிவை பிசிசிஐ எடுக்க உள்ளது.
கோலி
கோலியை விட ரோஹித்திடம் அதிக தலைமைப் பண்பு இருக்கிறது. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் ரோஹித் சர்மா சிறப்பாக செயல்படுகிறார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்து நான்கு கோப்பைகளை மும்பைக்கு வாங்கி கொடுத்து இருக்கிறார். அவர்தான் இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்று பிசிசிஐ நினைக்கிறது.
ஏன் மாற்றம்
இந்த மாற்றத்திற்கு தோனியும் முக்கிய காரணம் என்று கூறுகிறார்கள். ஆம் தோனி இருக்கும் வரை அவர் கோலியை கண்டிப்பாக வழி நடத்துவார். பீல்டிங் நிற்க வைப்பதில் கோலியை தோனிதான் வழிநடத்தி வருகிறார். ஆனால் இந்த வருடம் தோனி ஓய்வு பெற்ற பின் கோலி தனித்து விடப்பட வாய்ப்புள்ளது. தோனி இல்லாமல் கோலி திணறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
என்ன மாற்றம்
இதனால் தோனி இருக்கும் வரை கோலி கேப்டனாக இருந்தது ஓகே. தோனி சென்ற பின் ரோஹித் சர்மா கேப்டனாக மாறுவதுதான் சரியாக இருக்கும். அதுதான் இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நல்லது என்று பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.