நெருக்கமான நண்பர்கள்
மலிங்காவும் தோனியும் அந்த அளவிற்கு நெருக்கமான நண்பர்களாக மாறி இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் என்றும் கூட கூறலாம். ஐபிஎல்லில் ஏற்பட்ட நட்பு மலிங்கா - தோனி இடையே இப்போதும் நீடித்து வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடும் மூத்த வீரர்களில் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.
எப்படி இவர்கள்
மலிங்காவிற்கு இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் முக்கியமானது. இலங்கை அணியே இவரை நம்பித்தான் இந்த தொடரில் களமிறங்கியது என்று கூட கூறலாம். அதேபோல் மலிங்காவும் இந்த தொடரில் மிகவும் சிறப்பாகவே விளையாடினார். தேவையான நேரத்தில் அணிக்காக விக்கெட் எடுத்து அசத்தினார்.
தோனி எப்படி
அதே சமயம் தோனிக்கு இந்த உலகக் கோப்பை தொடர் அத்தனை சிறப்பாக அமையவில்லை. எப்போதும் அவரிடம் இருக்கும் மேஜிக் இந்த தொடரில் நிகழவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்த நிலையில்தான் இரண்டு ஜாம்பவான் வீரர்களும் கடைசி தடவையாக களத்தில் தங்களை எதிர்கொள்ள இருக்கிறார்கள். ஆம் இருவருக்கும் இது கடைசி ஒன் -டு - ஒன் போட்டியாகும்.
கடைசி போட்டி
இந்த உலகக் கோப்பை தொடர்தான் இரண்டு வீரர்களுக்கும் கடைசி தொடர் ஆகும். அதேபோல் இன்று நடக்கும் போட்டியே இலங்கை - இந்தியா இந்த தொடரில் மோதும் கடைசி போட்டியாகும். அதனால் இரண்டு வீரர்களும் மோதும் இந்த கடைசி போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு லெஜெண்ட்களும் இன்று கடைசி யார்க்கருக்காகவும்.. கடைசி ஹெலிகாப்டர் ஷாட்டுக்காகவும் களமிறங்க இருக்கிறார்கள்.