எப்படி
இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் ரன் ரேட் கொஞ்சம் நன்றாகவே இருந்தது. முக்கியமாக கோலி, ரோஹித் அவுட்டாகும் முன் நன்றாக அதிரடியாக ஆடினார்கள். அதேபோல் பாண்டியா தான் அவுட்டாகும் வரை மிகவும் அதிரடியாக ஆடினார்.
மோசம்
அதிலும் முக்கியமாக பாண்டியா மற்றும் பண்ட் ஆடும் போது இந்திய அணியின் ரன் ரேட் இங்கிலாந்து அணிக்கு ஈடாக இருந்தது. ஒரு ஓவருக்கு 8 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில்தான் இந்திய அணியின் ரன் ரேட் இருந்தது. ஆனால் போக போக இது மோசமாக சரிய தொடங்கியது.
ரன் ரேட்
தோனி களமிறங்கிய பின் இந்திய அணியின் ரன் ரேட் மோசமாக சுருங்கியது. ஒரு ஓவருக்கு 4 ரன்கள் என்று இந்திய அணியின் ரன் ரேட் குறைந்தது. இதனால் வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக கை நழுவியது. நிறைய ரன்கள் இலக்கு இருந்த போதும் தோனி அதிரடியாக ஆடவில்லை. அதேபோல் கேதார் ஜாதாவும் சிங்கிள் மட்டும் எடுத்தார்.
எப்படி அதிர்ச்சி
இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள். தோனி ஏன் இப்படி ஆடுகிறார். ஏன் இப்போதும் கூட பொறுமையாக ஆடுகிறார் என்று பலர் அதிர்ச்சி அடைந்தார் கடைசியில் 14 பந்துக்கு 50 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை வந்த பின் ரசிகர்கள் மனசு விட்டு போனார்கள். இந்த போட்டியை தோனியால் பினிஷ் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்தனர்.
இந்தியா
இதுவே கடையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் தற்போது தோனிக்கு எதிராக ரசிகர்கள், விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கடந்த மூன்று போட்டியிலும் தோனி இப்படித்தான் ஆடினார் என்று ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.