எப்படி நடந்தது
இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா அடித்த மிக குறைவான ஸ்கோர் இதுதான். இந்த போட்டியில் தோனி தொடக்கத்தில் இருந்தே நிதானமாக ஆடி வந்தார். இவரின் ஆட்டம் இந்திய ரசிகர்களை பெரிதும் பொறுமை இழக்க செய்தது. ஏன் தோனி டெஸ்ட் போட்டியில் ஆடுவது போல ஆடுகிறார் என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.
மோசமானது
தேவையான பந்துகளை மட்டுமே அவர் தொட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணியின் ரன் ரேட் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. தோனி 52 பந்தில் 28 ரன்கள் அடித்து இருந்த போது அவுட்டானார். இவர் ரஷீத் கான் பந்தில் அவுட்டானார். கீப்பர் இஷ்ரத் அலி கில் தோனியை ஸ்டம்பிட் செய்தார். இதுவும் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
விஜய் சங்கர்
அந்த போட்டியில் தோனியின் மீது பெரிய அளவில் அழுத்தம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு விஜய் சங்கரின் சொதப்பலான ஆட்டமும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அவர் சரியாக 4 வது இடத்தில் ஆடி இருந்தால், அதன்பின் இறங்கிய தோனிக்கு இவ்வளவு அழுத்தம் இருந்திருக்காது. இந்த நிலையில் 4வது இடத்தில் ஆடும் வீரரை மாற்ற கோலி ஏற்கனவே திட்டமிட்டு இருக்கிறார்.
யார் வருவார்
பெரும்பாலும் இந்திய அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்கி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. தேவையான நேரங்களில் இவர் அதிரடியாகவும் ஆட கூடியவர். இதனால் சங்கருக்கு பதிலாக இவரை களமிறக்க வாய்ப்புள்ளது. அப்படி இல்லை என்றால் இளம் வீரர் ரிஷப் பண்ட் களமிறங்கவும் வாய்ப்புள்ளது.
ஆனால் என்ன
ஆனால் இவர்கள் இருவரில் யார் விஜய் சங்கருக்கு பதிலாக வந்தாலும் அவர்கள் 4வது இடத்தில் களமிறங்க மாட்டார்கள். பெரும்பாலும் ஐந்தாவது இடத்தில்தான் களமிறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. 4 வது இடத்தில் பெரும்பாலும் தோனிதான் இனி வரும் போட்டிகளில் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள்.
எப்படி நடக்கும்
தோனிக்கு 5 அல்லது 6 வது இடங்களை விட 4வது இடத்தில்தான் ரன் ரேட் அதிகமாக இருக்கிறது. அந்த இடத்தில் அவர் ஆடும் சமயங்களில் இந்திய அணி பெரும்பாலும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் கோலியும் தோனியும் ஒன்றாக களத்தில் இருக்கும் போது அது இந்திய அணிக்கு இன்னும் பலம் சேர்க்கும். இதனால் அடுத்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் நிறைய மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.