சிறப்பு
இங்கிலாந்து அணிக்கு மிக சிறப்பான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் வேறு காயம் காரணம் சென்றுவிட்டு மீண்டும் அணிக்குள் வந்து இருக்கிறார். அதே போல் பவுலிங் ஆரடரும் அந்த அணிக்கு சிறப்பாகவே இருக்கிறது.
எப்படி வீசுகிறார்
முக்கியமாக இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் மிகவும் சிறப்பாக பந்து வீசுகிறார் என்றுதான் கூற வேண்டும். அவர்தான் இந்த உலகக் கோப்பை தொடரில் கிரிக்கெட் உலகிற்கு கிடைத்த முத்து என்று கூட கூறலாம். ஆம் இதுவரை விளையாடிய போட்டிகளில் 5 முறை 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மொத்தம் இவர் 16 விக்கெட் எடுத்துள்ளார்.
ஆனால் என்ன
ஆனால் இவர் தற்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு காலில் தசைப்பிடிப்பும், சிறிய காயமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் இவர் கடுமையாக அவதிப்பட்டு வருகிறார். இன்று காலை அவரை மருத்துவர்கள் சோதனை செய்ய இருக்கிறார்கள். அதன்பின்பே அவர் இன்று விளையாடுவாரா என்பது தெரிய வரும்.
நல்லது
இவர் நேற்று வலைப்பயிற்சி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் சிறந்த பவுலர்களில் ஒருவரான ஆர்ச்சர் இன்று விளையாடாமல் போனால் அது இந்திய அணிக்கு மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்த நல்ல வாய்ப்பை இந்திய பேட்ஸ்மேன்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோம்.